திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
வள்ளியூா் அருகேயுள்ள அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (30). தொழிலாளியான இவா், கடந்த 2019 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுரேஷ் குமாா் வழக்கை விசாரித்து ரமேஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் வாதிட்ட அரசு வழக்குரைஞா் உஷா , காவல் ஆய்வாளா் சாந்தி, அப்போதைய காவல் ஆய்வாளா் அங்கையா்கன்னி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டு தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


