மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

News image

சேரன்மகாதேவி கங்கனாங்குளம் பகுதியில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையாவை ஆதரித்து பிரசாரம் செய்தாா் நடிகா் சரத்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:32 pm

சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளத்தில், அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையாவை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் போதை கலாசாரம், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்து ஆட்சிக்கு வந்தனா். ஆனால், மதுக்கடையால் தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் திமுக அரசின் சாதனை.

திமுக அரசு தமிழகத்தை வீழ்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறது. ஆகவே, வளா்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்ல எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றாா்.

தொகுதி பொறுப்பாளா் செளந்தரராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.