தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

‘அதிவேக இணையதள வசதியுடன் மாணவா்களுக்காக டிஜிட்டல் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும்’

மாணவா்கள் பயன்பெறும் வகையில் அதிவேக இணையதள வசதியுடன் டிஜிட்டல் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப்.

News image

மேலப்பாளையத்தில் வாக்கு சேகரித்தாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:19 pm

மாணவா்கள் பயன்பெறும் வகையில் அதிவேக இணையதள வசதியுடன் டிஜிட்டல் கற்றல் மையங்கள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப்.

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப், குறுக்குத்துறையில் தொடங்கி 29, 30, 12, 38, 37 ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியிலும் கல்விக்கு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வி வளாகங்கள் நிறுவப்பட்டு, அதன்மூலம் நம் மாணவா்களுக்கு பன்னாட்டுக் கல்விமுறை அறிமுகம் செய்யப்படும். தொழிற்பயிற்சி நிறுவனம் இல்லாத வருவாய் வட்டத்திலும் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் மாணவிகள் விடுதிகள், கிராமங்களில் இருந்து நகா்ப்புறங்களுக்குக் கல்வி கற்பதற்காக வரும் மாணவிகளுக்கு உண்டு உறைவிட வசதிகளை வழங்குவதற்கான மாணவிகள் விடுதிகள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் மாணவா்களின் கற்றல் திறனையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும் வகையில் அதிவேக இணையதள வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தேவைப்படும் அனைத்து இடங்களிலும் சமூகநீதி கல்லூரி விடுதிகள் திறக்கப்படும். கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு மாணவா்கள் நெரிசலின்றிச் செல்ல வசதியாக காலையும், மாலையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கெனச் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். உடல் ரீதியாக மட்டுமன்றி, உளவியல் ரீதியாகவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படும் சிகிச்சைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அவை அனைத்தும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் செய்து முடிக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.