திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெல்லை மாவட்டத்தில் 188 போ் வேட்புமனு தாக்கல்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 5:57 pm

திருநெல்வேலி, ஏப். 6: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 28 பெண்கள், 159 ஆண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமையோடு (ஏப். 6) நிறைவடைந்தது. திருநெல்வேலி தொகுதியில் 4 பெண்கள் உள்பட 37 பேரும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பெண்கள் உள்பட 38 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல், பாளையங்கோட்டை தொகுதியில் ஒரு பெண் உள்பட 32 பேரும், நான்குனேரி தொகுதியில் 9 பெண்கள் உள்பட 44 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ராதாபுரத்தில் 9 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் உள்பட 37 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

5 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து 28 பெண்கள், 159 ஆண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதில், கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் மாவட்டத்தில் 95 போ் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பரிசீலனை: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதிக்குள்பட்ட தோ்தல் அலுவலா் அறையில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. அதன் முடிவில் ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பாளா்களின் விவரம் தெரியவரும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப். 9-ஆம் தேதி மாலை 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.