இந்த நிலையில், திரைக்கு வந்து சில நாள்களே ஆன திரைப்படங்களின் டி.வி.டி. விறுவிறுப்பாக விற்கப்படுகின்றன. இப்போது ரூ.25-க்கும் டி.வி.டி. கிடைப்பதாகக் கூறப்படுகிறது. திருட்டு டி.வி.டி. விற்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என அரசு கூறி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இம் மாநகரில் திருட்டு டி.வி.டி. விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. திரையரங்குகளின் அடாவடியான கட்டண உயர்வு,திருட்டு டி.வி.டி.க்களின் விலை குறைவு ஆகியவற்றால் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளுக்கு விடை கொடுத்து வருகின்றனர். இதனால் முழுமையாகப் பாதிக்கப்படுவது சினிமாத்துறையும், திரையரங்குகளும்தான். சினிமாதுறை திருட்டு டி.வி.டி.க்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், திரையரங்குகளில் கட்டண உயர்வு குறித்து பேசுவதில்லை.