நஷ்டம் அதிகரிக்கும்: அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெரும்பாலானவை நஷ்டத்தில் இயங்கி வருவது யாவரும் அறிந்த ஒன்றுதான். திருநெல்வேலி மண்டலத்தில் இதுவரை ஒட்டுமொத்த நஷ்டம் ரூ. 100 கோடிக்கும் அதிகம். எரிபொருள் சேமிப்பு, மனித வள மேலாண்மை, தொழிலாளர்களுக்கு பயிற்சி, பஸ்களை அதிகபட்சம் இயக்குதல் போன்ற மேம்பட்ட செயல்பாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், கடந்த ஆண்டின் நஷ்டம் மட்டும் ரூ. 38 கோடி என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய டீசல் விலை உயர்வால் இந்த நஷ்டம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.