இந்நிலையில், விபத்துகளை குறைக்கும் ஒரு வழிமுறையாக, திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் எடுக்க வருகிறவர்களுக்கு, விபத்து குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் ஒரு நாளைக்கு 100 பேர் கலந்துகொள்கிறார்கள். தலா 50 பேர் பங்கேற்கும் வகையில் இரு வகுப்புகளாக இது நடத்தப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகள், போக்குவரத்து சிக்னல்கள், இன்சூரன்ஸ், ரயில்வே கிராஸிங் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக 30 நிமிடங்கள் இந்த வகுப்பு நடைபெறுகிறது.