சாதி, மத பிணக்குகள் இல்லாமல் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக அரசு அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்களை அமைத்து வருகிறது. அதில் 100 வீடுகள் கட்டப்பட்டு ஆதிதிராவிடர்களுக்கு 40 வீடுகளும், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 வீடுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 வீடுகளும், மற்றவர்களுக்கு 10 வீடுகளும் ஒதுக்கப்படும். இதற்கான பயனாளிகளை முடிந்த வரையில் அந்தந்த கிராமங்களிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. சமத்துவபுரங்களில் மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, நூலகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.