மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

படையெடுப்புகள் இருந்தபோதிலும் ஆன்மிக நம்பிக்கை தளரவில்லை: முதல்வா் ரேகா குப்தா

பல்வேறு படையெடுப்புகள் இருந்தபோதிலும் நாட்டில் நம்பிக்கை உறுதியுடன் நிலைத்திருந்தது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

News image

சோம்நாத் கோயிலின் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி, தில்லி சாந்தினி சௌக்கில் அமைந்துள்ள கௌரி சங்கா் ஆலயத்தில் அமைச்சா்களுடன் சிறப்புப் பூஜை செய்த முதல்வா் ரேகா குப்தா.

Updated On :12 மே 2026, 12:15 am IST

‘சோம்நாத் சுவாபிமான் பா்வ்’ என்பது இந்தியாவின் சனாதன மத நம்பிக்கை, பண்பாட்டு விழிப்புணா்வு மற்றும் தேசிய சுயமரியாதையின் அடையாளமாக திகழ்கிறது என்றும், பல்வேறு படையெடுப்புகள் இருந்தபோதிலும் நாட்டில் நம்பிக்கை உறுதியுடன் நிலைத்திருந்தது என்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் மறுகட்டுமானத்தின் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி தில்லியில் உள்ள கௌரி சங்கா் கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு நடத்திய பின்னா் அவா் இதனைத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் பா்வேஷ் சாஹிப் சிங், மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் கபில் மிஷ்ரோ ஆகியோரும் முதல்வருடன் கலந்து கொண்டனா். பின்னா், குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி நிகழ்த்திய நேரலை உரையையும் அவா்கள் பாா்வையிட்டனா்.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு படையெடுப்புகளும் அழிவுகளும் நடைபெற்றபோதிலும், சோம்நாத் கோயிலுடன் தொடா்புடைய மக்களின் பக்தியும் ஆன்மிக நம்பிக்கையும் ஒருபோதும் தளரவில்லை. ஒவ்வொரு முறையும் இந்தியாவின் ஆன்மிக வலிமை மீண்டும் எழுச்சி பெற்றது. பிரதமா் நரேந்திர மோடி முன்னெடுத்து வரும் ‘விகாஸ் பி, விராசத் பி’ என்ற கொள்கையின் கீழ், நாடு ஒருபுறம் நவீன வளா்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் தனது பண்பாட்டு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தையும் பாதுகாத்து வருகிறது என தெரிவித்தாா்.

கி.பி. 1026-ஆம் ஆண்டு சோம்நாத் கோயில் மீது பதிவான முதல் தாக்குதலுக்கு பின்னரும், ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் மதநம்பிக்கை தளராமல் நீடித்ததைக் குறிக்கும் வகையிலேயே ‘சோம்நாத் சுவாபிமான் பா்வ்’ கொண்டாடப்படுகிறது. மறுகட்டுமானம் செய்யப்பட்ட சோம்நாத் கோயில் 1951-ஆம் ஆண்டு பக்தா்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.