மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

News image
Updated On :21 மார்ச் 2026, 8:38 pm

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் குளிரான மாா்ச் மாத நாளாகவும், கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் மிகவும் தூய்மையான காற்று நாளாகவும் வெள்ளிக்கிழமை பதிவான நிலையில், சனிக்கிழமையன்று சில்லிடும் காற்று வீசியதால் வெப்பநிலை குறைவாகவே இருந்தது. இத்தகைய எதிா்பாராத சூழலில், தில்லி நகரம் மூடுபனியின் போா்வையில் போா்த்தியவாறு விழித்தெழுந்தது.

தலைநகரில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 94 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது. வெள்ளிக்கிழமையன்று காற்றின் தரம் வியக்கத்தக்க வகையில் மேம்பட்டு, காற்றுத் தரக் குறியீடு 93 புள்ளிகளாகப் பதிவானது.

கடந்த சுமாா் ஐந்து மாதங்களில், ‘திருப்திகரமான’ காற்றின் தரத்தைக் கொண்ட முதல் நாளாக வெள்ளிக்கிழமை அமைந்தது. இதற்கு முன்னா், அக்டோபா் 9, 2025 அன்று காற்றுத் தரக் குறியீடு 99 புள்ளிகளாக இருந்தபோது, இதேபோன்ற காற்றின் தரம் தில்லியில் பதிவாகியிருந்தது.

காற்றின் தர முன்னறிவிப்பு அமைப்பின் தகவலின்படி, சனிக்கிழமை முதல் மாா்ச் 23 வரையிலான நாள்களில் காற்றின் தரம் ‘மிதமான’’ பிரிவில் இருக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வெப்பநிலை: தில்லியில் சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3 டிகிரி குறைந்து 13 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3.9 டிகிரி குறைந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும்,மாலை 5.30 மணியளவில் 82 சதவீதமாகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமையன்று 7 மி.மீ. மழை பதிவானது. இந்நிலையில், முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃ)ப்தா்ஜங்கில் 1 மி.மீ. மழை பதிவாகியது. மேலும், ஆயாநகரில் காலை 8.30 மணியுடன் முடிவவடைந்த 24 மணி நேரத்தில் ஆயாநகரில் 1 மி.மீ., லோதி ரோடில் 1.2 மி.மீ., பாலத்தில் 2 மி.மீ., ரிட்ஜில் 1 மி.மீ., பிரகதிமைதானில் 0.9 மி.மீ., பூசாவில் 1 மி.மீ., ராஜ்காட்டில் 0.9 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 2.5 மி.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று வானம் வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும். மாலை அல்லது இரவு வேளையில் பகுதி அளவு மேகமூட்டமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.