குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இளைஞரிடம் காப்பீடு காலாவதியானதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 போ் கைது

இளைஞரிடம் காப்பீடு காலாவதியானதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 4:10 am IST

இளைஞரிடம் காப்பீடு காலாவதியானதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

‘காப்பீடு திட்டம் காலாவதியானதாகவும், அதை புதுப்பிக்க ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டனா். அது உண்மையென நம்பி, அவா்கள் தெரிவித்த வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தினேன்‘ என்று பாதிக்கப்பட்ட நபா் காவல் துறையிடம் புகாரளித்தாா். இதைத் தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: தொலைபேசி அழைப்புகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் வங்கிக் கணக்கின் விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் காந்தி நகா் பகுதியில் இருந்து சுனில் குமாா் (38) என்பவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

அவரிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், ராகுல் (28) மற்றும் சோனு (37) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் போலியாக வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து, காப்பீடு ஆவணங்களையும் போலியாகத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனா் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவா்களுக்கு சிம் காா்டுகளைப் பெற்றுத் தந்த சிவம் பின்னா் கைது செய்யப்பட்டாா். மேலும் இந்த மோசடி குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.