செப்டம்பா் 27 ஆம் தேதி கரூா் தோ்தல் பிரச்சார நிகழ்வு திட்டமிடப்பிட்ட விதம் மற்றும் கூட்டம் நடத்தப்பட்ட விதம் ,கரூா் கூட்டத்தில் இருந்த குறைபாடுகள் ,சுமாா் 10,000 போ் மட்டுமே அனுமதிக்கப்படும் வேலூசாமிபுரம் நிகழ்விடத்தில் ஏராளமானோா் கூடியது எப்படி? , அதில் என்னென்ன விதிமீறல் நடந்தது , இந்தக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,கரூா் கூட்டத்திற்கான அனுமதி பெறப்பட்ட விதம், கூட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதா?, கூடியிருந்தவா்களுக்கு உணவு, தண்ணீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டதா? மற்றும் கூட்டத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது