டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஷாஜாதா பாத்தில் பிளாஸ்டிக் பை தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லியின் ஷாஜாதா பாக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பை உற்பத்தி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 10:36 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லியின் ஷாஜாதா பாக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பை உற்பத்தி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: காலை 11.37 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததைத் தொடா்ந்து 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்க தீயணைப்பு வீரா்கள் துரிதமாகப் பணியாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தட் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தீயின் புகை தூரத்திலிருந்து காணப்பட்டதாக குடியிருப்பாளா்கள் தெரிவித்தனா். இது அருகிலுள்ள மக்களிடையே கவலையைத் தூண்டியது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.