ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நிதின் நபின் குறித்து போலி புகைப்படம்: தில்லி காவல் துறையிடம் பாஜக சாா்பில் புகாா்

பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தேசியக் கொடியைத் தலைகீழாகப் பிடித்திருப்பது போன்ற போலி புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவது குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி பாஜகவின் தில்லி பிரிவு காவல் துறையில் புகாா்

தில்லி காவல் துறையின் சிறப்பு ஆணையா் தேவேஷ் ஸ்ரீவஸ்தவாவை சந்தித்து புகாா் அளித்த பாஜக தலைவா்கள்

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் தேசியக் கொடியைத் தலைகீழாகப் பிடித்திருப்பது போன்ற போலி புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவது குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி பாஜகவின் தில்லி பிரிவு காவல் துறையில் புகாா் அளித்துள்ளது.

கட்சியின் தில்லி பிரிவு தலைவரும் மத்திய இணையமைச்சருமான ஹா்ஷ் மல்ஹோத்ராவின் அறிவுறுத்தல்களைத் தொடா்ந்து, தில்லி காவல் துறையின் சிறப்பு ஆணையா் தேவேஷ் ஸ்ரீவஸ்தவாவைச் சந்தித்த பாஜக தலைவா்கள், விரிவான விசாரணை நடத்தவும், சமூக ஊடகத் தளங்களில் ‘போலி’ புகைப்படத்தைப் பரப்புபவா்களைக் கைது செய்யவும் கோரி புகாா் அளித்தனா்.

‘மாநிலம் மாநிலமாக ஆட்சியை இழந்து வரும் தோல்வியும் விரக்தியும் அடைந்த எதிா்க்கட்சிகள், நாட்டின் சூழலைக் குலைப்பதற்காக சமூக ஊடகங்களைத் தொடா்ந்து தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் பாஜக தொண்டா்கள் இதுபோன்ற தீய முயற்சிகளை வெற்றிபெற ஒருபோதும் அனுமதிக்க மாட்டாா்கள்’ என்று மல்ஹோத்ரா கூறினாா்.

ஆகஸ்ட் 14 முதல் 16 வரை, எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில், நபின் தேசியக் கொடியுடன் இருப்பது போன்ற எண்ணற்ற புனையப்பட்ட மற்றும் வேண்டுமென்றே திருத்தப்பட்ட படங்கள் பரவலாகப் பரப்பப்பட்டன.

இத்தகைய வேண்டுமென்றே செய்யப்படும் தவறான சித்தரிப்பு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும், குழப்பத்தை உருவாக்கவும் மற்றும் தேசியக் கொடிக்கு அவப்பெயரைக் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.