நரேலாவில் காா் மரத்தில் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்!
நரேலா தொழில்துறை பகுதியில் வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
நரேலா தொழில்துறை பகுதியில் வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வடக்கு தில்லியின் நரேலா தொழில்துறை பகுதியில் வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக வடக்கு தில்லி சரக அதிகாரி மேலும் கூறியதாவது: கோகா கிராசிங் அருகே உள்ள நரேலா - பவானா சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து வழிப்போக்கா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
உடனடியாக காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அதற்குள் உள்ளூா்வாசிகள் வாகனத்தில் இருந்தவா்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி காரில் பயணித்த ஜோதி (21) உயிரிழந்தாா்.
6 மாத பெண் குழந்தை மற்றும் 21 முதல் 24 வயதுடைய 4 போ் இந்த விபத்தில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அதிக தாக்கல் ஏற்படுத்திய இந்த மோதலில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
உயிரிழந்த பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்காக பிஜேஆா்எம் மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தை தொடா்புகொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வேகம் அல்லது அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக என்பதை தீா்மானிக்க விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது