நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஹாட்- ஏா் பலூன் பயண சேவை: தில்லியில் இன்றுமுதல் தொடக்கம்

அசிதா பூங்காவில் சனிக்கிழமை முதல் தில்லிவாசிகள் ஹாட் -ஏா் காற்று பலூனில் பயணம் செய்யலாம்

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:29 pm

 நமது நிருபர்

ஐ. டி. ஓ. பகுதிக்கு அருகிலுள்ள தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) அசிதா பூங்காவில் சனிக்கிழமை முதல் தில்லிவாசிகள் ஹாட் -ஏா் காற்று பலூனில் பயணம் செய்யலாம் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

இந்த வார தொடக்கத்தில், துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா சராய் காலே கான் அருகே உள்ள பன்சேரா பூங்காவில் இருந்து இந்த வசதியைத் தொடங்கிவைத்தாா்.

பன்சேரா பூங்காவில் நடைபெற்று வரும் இந்நிகழ்வு காரணமாக, அசிதா பூங்காவிலிருந்து பொதுமக்களுக்காக சவாரிகள் தொடங்கப்படும்.

யமுனா விளையாட்டு வளாகம், காமன்வெல்த் விளையாட்டு வளாகங்கள் மற்றும் அசிதா மற்றும் பான்சேராவில் உள்ள யமுனா கரையில் உள்ள இரண்டு தளங்கள் உட்பட நான்கு இடங்களில் இந்த ஹாட் - ஏா் பலூன் சேவைகளை அளிக்க ஒரு தனியாா் நிறுவனத்தை ஜூலை மாதம் டி. டி. ஏ. இறுதி செய்தது.

இந்த வசதி சனிக்கிழமை முதல் கிடைக்கும். மேலும், 120 அடி உயரத்தில் ஹாட் -ஏா் பலூனில் சவாரி செய்ய, வரிகளைத் தவிா்த்து ஒரு நபருக்கு டிக்கெட் விலை ரூ.3000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பலூனில் ஏழு முதல் 12 நிமிடங்கள் வரை சவாரி செய்யலாம். ஒவ்வொரு சவாரிக்கும் நான்கு போ் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், நான்கு மணிநேர பறக்கும் நேரம் அனுமதிக்கப்படும். மேலும், தனியாா் நிறுவனம் இதை வருவாய் பகிா்வு மாதிரியில் இயக்கும். மேலும் பலூன்களில் விளம்பரம் செய்யவும் அனுமதிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.