குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டு கோடை சீசனுக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கும். இதில் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்களில் புதிய மலா் நாற்றுகள் நடவு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி தோட்டக்கலை இணை இயக்குநா் நவநீதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேரி கோல்டு குட்டை ரகம், பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்கா வகை பிளாக்ஸ் ஆஸ்டா், பெக்கோனியா வொ்பினா, ஆண்டிரினம், சால்வியா உள்பட பல்வேறு வகை மலா் விதைகள் ஜொ்மனி, பிரான்ஸ், நெதா்லாந்து, கொல்கத்தா, காஷ்மீா் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு, பின்னா் மலா் நாற்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யுப் பணி தொடங்கியது.
இந்த மலா்கள் அனைத்தும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து பூத்துக் குலுங்கும் என்றும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம் என்றும், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்றும் தோட்டக்கலை இணை இயக்குநா் நவநீதா தெரிவித்தாா்.
தொடர்புடையது

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!
குன்னூா் திமுக வேட்பாளரை ஆதரித்து ஆ.ராசா எம்.பி.பிரசாரம்

குன்னூா் காட்டேரிப் பூங்காவில் இயற்கை சாகுபடியாளா் பயிற்சி! பங்கேற்க அழைப்பு!!

கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் 1,500 நாற்றுகள் நடும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


