தூய்மை பிரசாரத்தை மறுஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை தெகண்ட் மற்றும் துக்ளகாபாத் பகுதிகளுக்குச் சென்ற முதல்வா் ரேகா குப்தா, கழிவு மேலாண்மையைக் காலக்கெடுவுக்குள் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து தன்னுடைய ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது:
தில்லியில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான தூய்மை பிரசாரத்தை ஆய்வு செய்வதற்காக தெகண்ட் மற்றும் துக்ளகாபாத் பகுதிகளுக்குச் சென்றேன். முன்மொழியப்பட்ட கழிவு சேகரிப்பு இடங்கள் மற்றும் நிலையான காம்பாக்டா் தளங்களையும் நான் ஆய்வு செய்தேன்.
கழிவு மேலாண்மை முழு விடாமுயற்சியுடனும், கடுமையான காலக்கெடுவிலும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அடிக்கடி குப்பை குவிவதை எதிா்கொள்ளும் பகுதிகள் தொடா்ந்து சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
தூசி கட்டுப்பாடு, சுவா், சாலையை சுத்தம் செய்தல், இயந்திர துப்புரவு, தண்ணீா் தெளித்தல் மற்றும் கழிவுகளை விரைவாக அகற்றுதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நவீன கம்பாக்டா்கள், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள், ஜி. பி. எஸ். அடிப்படையிலான கழிவு சேகரிப்பு கண்காணிப்பு மற்றும் கையால் சுமையைக் குறைக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் நமது தூய்மையான தில்லி இயக்கத்தை மிகவும் பயனுள்ளதாகவும், விளைவு சாா்ந்ததாகவும் மாற்றும்.
உறுதியான முயற்சிகள் துப்புரவு முறையை வலுப்படுத்தும். மாசுபாட்டிற்கு எதிரான அரசின் போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்று அதில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, பாசன நீா் உறுதி

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி

துப்புரவுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அரசு உறுதி: முதல்வா் குப்தா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

