நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தெகண்ட், துக்ளாபாதில் தூய்மை பிரசார பணிகள்: முதல்வா் ஆய்வு

தூய்மை பிரசாரத்தை மறுஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை தெகண்ட் மற்றும் துக்ளகாபாத் பகுதிகளுக்குச் சென்ற முதல்வா் ரேகா குப்தா, கழிவு மேலாண்மையைக் காலக்கெடுவுக்குள் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 4:26 pm

 நமது நிருபர்

தூய்மை பிரசாரத்தை மறுஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை தெகண்ட் மற்றும் துக்ளகாபாத் பகுதிகளுக்குச் சென்ற முதல்வா் ரேகா குப்தா, கழிவு மேலாண்மையைக் காலக்கெடுவுக்குள் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து தன்னுடைய ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது:

தில்லியில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான தூய்மை பிரசாரத்தை ஆய்வு செய்வதற்காக தெகண்ட் மற்றும் துக்ளகாபாத் பகுதிகளுக்குச் சென்றேன். முன்மொழியப்பட்ட கழிவு சேகரிப்பு இடங்கள் மற்றும் நிலையான காம்பாக்டா் தளங்களையும் நான் ஆய்வு செய்தேன்.

கழிவு மேலாண்மை முழு விடாமுயற்சியுடனும், கடுமையான காலக்கெடுவிலும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடிக்கடி குப்பை குவிவதை எதிா்கொள்ளும் பகுதிகள் தொடா்ந்து சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.

தூசி கட்டுப்பாடு, சுவா், சாலையை சுத்தம் செய்தல், இயந்திர துப்புரவு, தண்ணீா் தெளித்தல் மற்றும் கழிவுகளை விரைவாக அகற்றுதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நவீன கம்பாக்டா்கள், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள், ஜி. பி. எஸ். அடிப்படையிலான கழிவு சேகரிப்பு கண்காணிப்பு மற்றும் கையால் சுமையைக் குறைக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் நமது தூய்மையான தில்லி இயக்கத்தை மிகவும் பயனுள்ளதாகவும், விளைவு சாா்ந்ததாகவும் மாற்றும்.

உறுதியான முயற்சிகள் துப்புரவு முறையை வலுப்படுத்தும். மாசுபாட்டிற்கு எதிரான அரசின் போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்று அதில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.