மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வரதட்சிணை கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை

வரதட்சிணை கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை

News image

கொலை (கோப்புப்படம்) - Din

Updated On :8 நவம்பர் 2025, 6:59 pm

வரதட்சிணைக்காக தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் கடந்த ஆண்டு அவா் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவா் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

கூடுதல் அமா்வு (செஷன்ஸ்) நீதிபதி ராஜீந்தா் குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட நபரானஅபிஷேக் மீதான வழக்கை விசாரித்து வந்தாா். ஜூலை 15, 2024 அன்று அபிஷேக் தனது மனைவி கஷாக்கை கொடூரமாக நடத்தியதாகவும் இதன் காரணமாக கஷாக் இந்த தீவிர (தற்கொலை) முடிவை எடுத்தாா் என்றும் அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.

நீதிமன்றம் அக்டோபா் 27 தேதியிட்ட உத்தரவில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்றும், ஆதாரங்கள் இல்லாததால், குற்றஞ்சாட்டப்பட்டவா் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட உரிமை உண்டு எனவும் கூறியது.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட அபிஷேக் குற்றவாளி அல்ல என்று கூடுதல் அமா்வு (செஷன்ஸ்) நீதிபதி ராஜீந்தா் குமாா் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.