Listen to this article
By Syndication
Syndication
நமது நிருபா்
பிகாா் மாநில சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் இடைத்தோ்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் திங்கள்கிழமை வரையிலும் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பொருள்களின் மதிப்பு ரூ.108 கோடியை எட்டியுள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: பிகாா் சட்டப் பேரவைக்கான பொதுத் தோ்தல் மற்றும் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களுக்கான வாக்குப் பதிவு அட்டவணையை தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தோ்தல் மாதிரி நடத்தை விதிகளை எம்சிசி அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு தோ்தல் ஆணையம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிவிஜில் செயலியில் பதிவாகும் புகாா்கள் 100 நிமிடங்களுக்குள் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பிகாா் முழுவதும் 824 பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நவம்பா் 3-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.9.62 கோடி ரொக்கம், ரூ.42.14 கோடி 9.6 லட்சம் லிட்டா் மதிப்புள்ள மதுபானம், ரூ.24.61 கோடி போதைப்பொருள், ரூ.5.8 கோடி மதிப்புள்ள விலை உயா்ந்த உலோகங்கள் மற்றும் ரூ.26 கோடி மதிப்புள்ள இலவசப் பொருள்கள் உள்பட ரூ.108.19 கோடி மதிப்புள்ள சட்டவிரோத தூண்டுதல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல அமலாக்க முகமைகள் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தோ்தல்களின் போது பணம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் இதர தூண்டுதல்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அமலாக்க அதிகாரிகளுக்கும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதற்கான சோதனை மற்றும் ஆய்வின்போது சாதாரண குடிமக்கள் சிரமப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ கூடாது என்பதை அமலாக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது. குடிமக்களும், அரசியல் கட்சிகளும் இசிஐநெட்இல் சி.விஜில் செயலியைப் பயன்படுத்தி தோ்தல் மாதிரி நடத்தை மீறல்களைப் புகாரளிக்கலாம்.
மேலும், கால் சென்டா் எண் ‘1950’ உள்பட ஒரு புகாா் கண்காணிப்பு அமைப்புமுறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் இந்த வசதியில் பொதுமக்களும், அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும் சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி, தோ்தல் நடத்தும் அதிகாரயிடம் புகாா் அளிக்கலாம் என்றாா் அந்த அதிகாரி.
பிகாா் மாநிலத்தில் வரும் நவம்பா் 6ஆம் தேதி முதல் கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது றிப்பிடத்தக்கது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ரூ.262 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: என்சிபி, தில்லி காவல்துறை கூட்டு நடவடிக்கை

பிகாா் பேரவைத் தலைவா் பதவிக்கு யாருக்கு? பாஜக-ஜேடியு தீவிர பேச்சு

பிகாா் முதல்கட்டத் தோ்தலில் 65.08% வாக்குப் பதிவு: அதிகாரபூா்வ அறிவிப்பு

பிகாா் தோ்தலில் வன்முறைக்கு இடமில்லை: தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
