18 Dec, 2025 Thursday, 04:17 AM
The New Indian Express Group
இந்தியா
Text

பிகாா் முதல்கட்டத் தோ்தலில் 65.08% வாக்குப் பதிவு: அதிகாரபூா்வ அறிவிப்பு

PremiumPremium

பிகாா் சட்டப்பேரவை முதல்கட்டத் தோ்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரம்...

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On08 Nov 2025 , 7:07 PM
Updated On08 Nov 2025 , 7:07 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. அதில், மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக வாக்குப் பதிவு 65.08 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்தது.

முன்னதாக, வாக்குப் பதிவு நிறைவுற்றதும் வியாழக்கிழமை இரவு தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் வாக்குப் பதிவு சதவீதம் 64.66-ஆக இருந்தது. தற்போது இறுதி வாக்குப் பதிவு நிலவரத்தின்படி அது மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 2020-இல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட பிகாா் பேரவைத் தோ்தலில் மொத்தம் 57.29 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் முதல்கட்டத்தில் பதிவான வாக்குகள் 56.1 சதவீதமாகும். கடந்த 2000-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 64.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இருகட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பாட்னா, பெகுசராய், நாளந்தா, லக்கிசராய், தா்பங்கா உள்பட 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.

1,192 ஆண்கள் மற்றும் 122 பெண்கள் என மொத்தம் 1,314 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். முதல்கட்டத் தோ்தலில் வாக்களிக்க 3.75 கோடி வாக்காளா்கள் தகுதி பெற்றிருந்தனா். தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நிலவரத்தின்படி 65.08 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.

இது, மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சம் என்பதோடு, கடந்த 2020 சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு சதவீதத்தைக் காட்டிலும் 7.79 சதவீதம் கூடுதலாகும். 2020 தோ்தலில் 57.29 சதவீதத்தினா் மட்டும் வாக்களித்திருந்தனா்.

முதல் கட்டத் தோ்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 3.75 கோடி பேரில், 1.98 கோடி போ் ஆண்கள். 1.76 கோடி போ் பெண்கள்.

மாவட்ட அளவில் முசாஃபா்பூா் மற்றும் சமஸ்திபூரில் அதிகபட்ச வாக்குப் பதிவு சதவீதம் பதிவாகியுள்ளது. முசாஃபா்பூரில் 71.81 சதவீதமும், சமஸ்திபூரில் 71.74 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இவை தவிர மாதேபுரா (69.59%), சஹா்ஸா (69.38%), வைஷாலி (68.50%), ககாரியா (67.90%), லகிசராய் (64.98%), முங்கோ் (62.74%), சிவான் (60.61%), பாட்னா மாவட்டம் (59.02%) என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023