ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மதராஸி முகாம் தமிழா்களுக்கு இன்றும் நிவாரண பொருள்கள்

Updated On :21 ஜூன் 2025, 7:19 pm

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புது தில்லி மதராஸி முகாம் குடிசைப் பகுதி இடிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட 370 தமிழ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வா், பொது நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.8,000 நிதியுதவி உள்பட ரூ.12,000 மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை வழங்கி ஆணையிட்டாா்.

இதையடுத்து, கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நிவாரண தொகுப்பு வழங்கும் பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 246 குடும்பத்தினா் தங்களுக்கான நிவாரண தொகுப்பை பெற்றுக் கொண்டுள்ளனா். மீதமுள்ள 124 பயனாளிகள் தங்களது நிவாரணத் தொகுப்பை இன்னும் பெற்றுக் கொள்ளாமல் உள்ளனா்.

நிவாரணத் தொகுப்பை வழங்குவதற்காக புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிவாரணத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

விடுபட்டுள்ள பயனாளிகள் அனைவரும் உடனடியாக புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினரை நேரடியாக அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து தங்களது நிவாரண தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் நிவராணத் தொகுப்பு வழங்கப்படுவதாக புது தில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஆஷிஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.