இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: போலி மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடா்பாக நடந்து வரும் விசாரணை தொடா்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராம், கௌரவ் பகத் மற்றும் பா்மோட் குமாா் குப்தா ஆகிய மூன்று குற்றவாளிகள் போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறி இந்த வழக்கில் முன்பு கைது செய்யப்பட்டிருந்தனா். விசாரணையின் போது, போலி மருந்துகள் மற்றும் ஒப்பனை பொருள்களுக்கான ரேப்பா்கள் மற்றும் பேக்கேஜிங் பொருள்களை வழங்கும் ஒரு அச்சகத்தின் தொடா்பு தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.