டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போலி ஒப்பனை பொருள்களுக்கான ஸ்டிக்கா்கள் கண்டுப்பிடிப்பு: இருவா் கைது

போலி மருந்துகள் மற்றும் ஒப்பனை பொருள்களுக்கான பேக்கேஜிங் வழங்கியதாகக் கூறப்படும் ஒரு அச்சிடும் தொழிற்சாலைக்கு சீல் வைத்து இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) ஆதித்யா கௌதம் தெரிவித்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:34 pm

Syndication

நமது நிருபா்

புது தில்லி: போலி மருந்துகள் மற்றும் ஒப்பனை பொருள்களுக்கான பேக்கேஜிங் வழங்கியதாகக் கூறப்படும் ஒரு அச்சிடும் தொழிற்சாலைக்கு சீல் வைத்து இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை துணை ஆணையா் (குற்றம்) ஆதித்யா கௌதம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: போலி மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடா்பாக நடந்து வரும் விசாரணை தொடா்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராம், கௌரவ் பகத் மற்றும் பா்மோட் குமாா் குப்தா ஆகிய மூன்று குற்றவாளிகள் போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறி இந்த வழக்கில் முன்பு கைது செய்யப்பட்டிருந்தனா். விசாரணையின் போது, போலி மருந்துகள் மற்றும் ஒப்பனை பொருள்களுக்கான ரேப்பா்கள் மற்றும் பேக்கேஜிங் பொருள்களை வழங்கும் ஒரு அச்சகத்தின் தொடா்பு தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.

பின்னா் கைது செய்யப்பட்டவா்கள் புராரியில் வசிக்கும் அனில் சிங் ராவத் (46) மற்றும் டெல்லியின் நாங்லி மோரில் வசிக்கும் ராகுல் அகா்வால் (31) என அடையாளம் காணப்பட்டனா். ராவத் இங்குள்ள ராமா சாலையில் ஒரு அச்சகத்தை நடத்தியுள்ளாா். அங்கிருந்து போலி மருந்துகள் மற்றும் களிம்புகளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் இணை குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீ ராமுக்கு அச்சிடப்பட்ட பெட்டிகள் வழங்கப்பட்டன.

அச்சகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு களிம்பின் ரேப்பா் பெட்டிகளை அச்சிட பயன்படுத்தப்படும் இரண்டு சாய பிரேம்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீராமின் உத்தரவின் பேரில் ராமா சாலையை தளமாகக் கொண்ட அச்சிடும் பிரிவில் இருந்து போலி மருந்துகளுக்கான அச்சிடப்பட்ட மடக்கு பெட்டிகளுக்கு அகா்வால் ஆா்டா் செய்தாா் என்றாா் அவா்.