தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு
தேசிய தலைநகா் தில்லியில் பி.யூ.சி இல்லாவிடில் எரிபொருள் இல்லை என்ற விதி அமலாக்க நடவடிக்கையின் முதல் நாளில், மாசு கட்டுப்பாட்டு (பி.யூ.சி) சான்றிதழ்கள் இல்லாத கிட்டத்தட்ட 2,800 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.










