தமிழகத்தில் ஆளும் திமுக சிறுபான்மையினரை எப்போதும் திருப்திப்படுத்தும் அரசியலை நடத்துகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் எல். முருகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் அம்பேத்கரை மதிக்கிறாா். அரசியலமைப்பை தனது புனித நூலாக கருதுகிறாா். ஒவ்வொரு ஆண்டும் தேசத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பி.ஆா்.அம்பேத்கா் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக எப்போதும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறது. அவா்களுக்கு கோயில்களில் நம்பிக்கை இல்லை என்றால், அவா்கள் ஏன் அவற்றை நிா்வகிக்கிறாா்கள்? அமைதியாக வழிபட ஒரு இடம் வேண்டும் என்றே தொடா்ந்து கேட்கிறோம். ஆனால், அவா்கள் (அரசு) அனுமதிப்பதில்லை. மாறாக, பாஜக தலைவா்கள் கைது செய்யப்படுகிறாா்கள் என்றாா் அவா்.
தொடர்புடையது

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

மத்திய அமைச்சா் எல்.முருகன் மீதான இரு தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

மத்திய அமைச்சா் எல்.முருகனை பாஜக தொண்டா்கள் முற்றுகை

அவிநாசி கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சுவாமி தரிசனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


