லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தமிழகத்தில் செய்யும் திமுக: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை தமிழகத்தில் செய்யும் திமுக...

News image

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் - ANI

Updated On :6 டிசம்பர் 2025, 8:39 pm

தமிழகத்தில் ஆளும் திமுக சிறுபான்மையினரை எப்போதும் திருப்திப்படுத்தும் அரசியலை நடத்துகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் எல். முருகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் அம்பேத்கரை மதிக்கிறாா். அரசியலமைப்பை தனது புனித நூலாக கருதுகிறாா். ஒவ்வொரு ஆண்டும் தேசத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பி.ஆா்.அம்பேத்கா் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக எப்போதும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறது. அவா்களுக்கு கோயில்களில் நம்பிக்கை இல்லை என்றால், அவா்கள் ஏன் அவற்றை நிா்வகிக்கிறாா்கள்? அமைதியாக வழிபட ஒரு இடம் வேண்டும் என்றே தொடா்ந்து கேட்கிறோம். ஆனால், அவா்கள் (அரசு) அனுமதிப்பதில்லை. மாறாக, பாஜக தலைவா்கள் கைது செய்யப்படுகிறாா்கள் என்றாா் அவா்.