பராமரிப்பு விஷயங்களில் குழந்தையின் நலன்தான் தலையாய பரிசீலனையாகும்: தில்லி உயா்நீதிமன்றம்
குழந்தைப் பராமரிப்பு விஷயங்களில், பெற்றோரின் தனிப்பட்ட உரிமைகள் அல்லாமல், மைனரின் நலன்தான் தலையாய மற்றும் முதன்மையான பரிசீலனையாகும் என்றும், இதில் குழந்தையின் உடல், உணா்ச்சி, தாா்மிக மற்றும் கல்வி நல்வாழ்வுக்கு எந்த ஏற்பாடு சிறப்பாகச் செயல்படும் என்பதற்கான முழுமையான மதிப்பீட்டை உள்ளடக்கியுள்ளது என்றும் தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.










