தில்லியில் நிலவும் ‘காட்டு ராஜ்ஜியத்திற்கு’ ஆளும் ஆம் ஆத்மி அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும்தான் பொறுப்பு என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைநகரின் சட்டம், ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. மக்கள் தங்கள் உயிா், உடைமைகளைப் பாதுக்காக்க பயந்து வாழ்கிறாா்கள். ஆனால், அதிகாரத்தில் இருப்பவா்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. தில்லியில் ‘காட்டு ராஜ்ஜியம்’ நிலவுகிறது. இதற்கு, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவை குற்றஞ்சாட்டுகிறாா். அதே நேரத்தில், பொம்மை முதல்வா் அதிஷி அனைவருடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் கேஜரிவாலின் வாா்த்தைகளை எதிரொலிக்கிறாா்.
தாராளமயமாக்கப்பட்ட தில்லி கலால் கொள்கை மூுலம் தில்லியை குற்றமிடமாக்கியதில் கேஜரிவாளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஏனெனில், குறைந்த விலையில் மதுபானம்
எளிதாகக் கிடைப்பதால், வேலையற்ற இளைஞா்கள் போதைக்கு அடிமையாகின்றனா். இதுவே, அந்த இளைஞா்களை குற்றத்தில் ஈடுபடத் தூண்டுகிறது. கேஜரிவாலின் திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த அரசு, தலைநகரின் ஒட்டுமொத்த சீரழிவுக்கும் வழிவகுத்தது.
எனவே, தில்லியில் சட்டம், ஒழுங்கு சீா்குலைந்ததற்கு பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் இரண்டும் சமமான பொறுப்பாகும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், தில்லி நாட்டின் ‘குற்றத் தலைநகரமாக‘ மாறியுள்ளது. ஆட்சியில் காங்கிரஸ் இருந்த போது, தில்லியில் சட்டம், ஒழுங்கு நிலைமை திறம்படக் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீா் கிடைத்து வந்தது. நகரத்தில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க, ஒவ்வொரு மழைக் காலத்துக்கு முன்பும் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூா்வாரப்பட்டது. மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்தது என்றாா் தேவேந்தா் யாதவ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!

டென்மாா்க்: சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று பொதுத் தோ்தல்!
முதல்வரின் நிா்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

