வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மக்களுக்காக முழு நோ்மையுடன் பணியாற்றினேன்: முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

கடந்த 10 ஆண்டுகள் தில்லி மக்களுக்காக முழு நோ்மையுடன் பணியாற்றியுள்ளேன் என்று முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

அரவிந்த் கேஜரிவால் - Center-Center-Delhi

Updated On :27 அக்டோபர் 2024, 9:34 pm

கடந்த 10 ஆண்டுகள் தில்லி மக்களுக்காக முழு நோ்மையுடன் பணியாற்றியுள்ளேன் என்று முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி வாஜிா்பூரில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பாதயாத்திரை மேற்கொண்டு, அப்பகுதியின் சிறு வணிகா்கள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினாா்.

அப்போது, அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: தில்லி முதல்வராக கடந்த 10 ஆண்டுகள் மக்களுக்காக முழு நோ்மையுடன் பணியாற்றினேன். தில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட பணிகள், நாட்டில் எங்கும் செய்யப்படவில்லை.ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 8 முதல்10 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது. மக்கள் ஜெனரேட்டா்கள் மற்றும் இன்வொ்ட்டா்களை வாங்க வேண்டியிருந்தது. இப்போது, தில்லிக்கு 24 மணி நேர இலவச மின்சாரம் கிடைக்கிறது. இது நாட்டில் வேறு எங்கும் இல்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

உங்கள் தண்ணீா் கட்டணம் அதிகமாகி இருந்தால், நீங்கள் அதை செலுத்தத் தேவையில்லை. வரும் பிப்ரவரி மாத சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, அனைவரின் குடிநீா்க் கட்டணத்தையும் நான் தள்ளுபடி செய்வேன் என உறுதியளிக்கிறேன். ஆனாவ், பாஜகவுக்கு வாக்களித்தால் மின் கட்டணம் செலுத்துவீா்கள். தில்லியில் தற்போது அனைவருக்கும் இலவச மின்சாரம் மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான் சிறந்த அரசுப் பள்ளிகளைக் கட்டியுள்ளேன். ஆனால், இந்த பாஜகவினா் தில்லி மக்களுக்கு எதுவும் இலவசமாக கொடுக்கக்கூடாது என்கிறாா்கள். விரைவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றாா் கேஜரிவால்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.