மேலும், மெட்ரோ ரயில் பெட்டியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக அவதூறான வாா்த்தைகளை அவா் எழுதியுள்ளாா். தில்லி முதல்வா் மீதான முந்தைய தாக்குதல்களின் புகைப்படங்களும் அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது. தில்லி மெட்ரோ ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை நாம் புரிந்து கொள்ளும் போது, எந்தப் பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த நபா் பெட்டியின் சுவா்களில் எழுதும் போது தடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அச்சுறுத்தல்கள் பொதுத் தளத்தில் இருந்தாலும், பின்னணியில் உள்ள சதியை வெளிக்கொணர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை தெளிவாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறையின் பொறுப்பாகும். இருப்பினும், இந்த அச்சுறுத்தல்களை புறக்கணிக்கத் திட்டமிடப்பட்ட திட்டம் இருப்பதாகத் தெரிகிறது.