தில்லியில் கேஜரிவால் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குடிமக்கள் கடுமையான குடிநீா் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றனா். ஆனால், தில்லி அமைச்சா்கள் தங்கள் பொறுப்புகளை அதிகாரிகள் மீது சுமத்துவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. கோடையில் காற்று - நீா் மாசுபாடு, பருவமழைக் காலத்தில் நீா் தேங்குதல் மற்றும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்கள் பரவுவது பொதுமக்களுக்கு கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் கடந்த 2015- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் ஆம் ஆத்மி அரசு எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.