தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அரசுப் பள்ளிகளின் காலை, பொது ‘ஷிப்ட்’மாணவா்களுக்கு இன்று விடுமுறை

தேசியத் தலைநகா் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஜனவரி 2024, 6:30 pm

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் கல்வித் துறை இயக்குநா் புபேஷ் செளத்ரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் திங்கள்கிழமை (ஜனவரி 22) நடைபெறும் ஸ்ரீ ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து தில்லி அரசின் சேவைகள் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், தில்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

இருப்பினும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாலை ‘ஷிப்ட்’ இயங்கும். இவா்களுக்கான வகுப்புகள் மதியம் 02.30 மணிக்கு தொடங்கும். ஆனால், வழக்கமான அட்டவணைப்படி மாலை 05.30 மணிக்கு மேல் வகுப்புகள் இருக்காது. இந்த ஏற்பாடு திங்கள்கிழமை (ஜனவரி 22) மட்டும்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.