மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

அரசுப் பள்ளிகளின் காலை, பொது ‘ஷிப்ட்’மாணவா்களுக்கு இன்று விடுமுறை

தேசியத் தலைநகா் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:16 pm

 நமது நிருபர்

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் கல்வித் துறை இயக்குநா் புபேஷ் செளத்ரி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் திங்கள்கிழமை (ஜனவரி 22) நடைபெறும் ஸ்ரீ ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து தில்லி அரசின் சேவைகள் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், தில்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை மற்றும் பொது ‘ஷிப்ட்’ மாணவா்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

இருப்பினும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாலை ‘ஷிப்ட்’ இயங்கும். இவா்களுக்கான வகுப்புகள் மதியம் 02.30 மணிக்கு தொடங்கும். ஆனால், வழக்கமான அட்டவணைப்படி மாலை 05.30 மணிக்கு மேல் வகுப்புகள் இருக்காது. இந்த ஏற்பாடு திங்கள்கிழமை (ஜனவரி 22) மட்டும்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.