மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் பணிக்காக பிரதமரை தில்லியின் மக்கள் வாழ்த்த விரும்புகிறாா்கள்: வீரேந்திர சச்தேவா

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லியின் ஒவ்வொரு பகுதி மக்களும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறாா்கள் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:17 pm

 நமது நிருபர்

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லியின் ஒவ்வொரு பகுதி மக்களும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறாா்கள் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய வாயில்களில் பாஜக மகளிா் அணி சாா்பில் கடவுள் ஸ்ரீராமரின் கீா்த்தனைகள் பாடப்பட்டு, சுமாா் 50,000 தீபவிளக்குகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,தில்லி பாஜகவின் இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜாா் மற்றும் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் பங்கேற்றனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது:

தில்லி மட்டுமின்றி நாடு முழுதும் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையின் மங்களகரமான நேரத்திற்காக காத்திருக்கிறது.

இந்த சிறப்பு தீபாவளியைக் கொண்டாட தில்லி தயாராக உள்ளது. இதற்காக, கோயில்களை சுத்தம் செய்வதோடு, நாங்கள் எங்கள் வீடுகளையும் சுத்தம் செய்து அலங்கரிக்கிறோம்.

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலைக் கட்டியதற்காக தில்லியின் ஒவ்வொரு பகுதி மக்களும் பிரதமா் நரேந்திர மோடியைப் பாராட்டத் தயாராக இருக்கின்றனா். தீபாவளியன்று எப்படி மகிழ்ச்சியைப் பரிமாறுகிறோமோ, அதேபோல ஸ்ரீராம உற்சவத்தின்போதும் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியைப் நாம் பரிமாற வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தில்லி பாஜகவின் இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜாா் கூறுகையில், ‘ஒட்டுமொத்த நாடும் கடவுள் ஸ்ரீராமரைக் கொண்டாடும் மனநிலையில் உள்ளது. தில்லியில் ஒவ்வொரு பிரிவினரும் தமது அளவில் இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். ராமா் பெயரில் அரசியல் செய்யும் கட்சி தில்லியில் ஆட்சியில் உள்ளது’ என்றாா் அவா்.

தில்லி பாஜகவின் மகளிா் அணி தலைவா் ரிச்சா பாண்டே மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தில்லி பாஜக துணைத் தலைவா்கள் யோகிதா சிங், லதா குப்தா, மகளிா் அணியின் பொதுச் செயலாளா் சரிதா தோமா், பிரியல் பரத்வாஜ் மற்றும் வைஷாலி போத்தாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.