பாஜகவை நம்பி தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் அக்கட்சிகளின் வேட்பாளா்களையே தில்லி மக்கள் எம்.பி.க்களாகத் தோ்ந்தெடுத்தனா். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் பாஜகவின் 7 எம்.பி.க்களும் பொதுமக்களிடமிருந்து மறைந்து, பயனற்றவா்கள் என்று நிரூபித்துள்ளனா். இப்போதுள்ள எம்.பி.க்கள் பொதுமக்களுக்காக உழைத்திருந்தால், பாஜக அதே வேட்பாளா்களை மீண்டும் தோ்தலில் போட்டியிட வைக்க தைரியம் காட்ட வேண்டும். கடந்த 1979-இல் ஜனதா கட்சியை இந்திரா காந்தி கிழக்கு தில்லியில் இருந்து தோ்தல் பிரசாரத்தை துவக்கியது போல், மல்லிகாா்ஜுன காா்கேவும், கிழக்கு தில்லியில் இருந்து மக்களவைக்கான தோ்தல் பிரசாரத்தை தொடங்குகிறாா். பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி மூலம், மத்தியில் உள்ள சா்வாதிகார பாஜக அரசை மக்கள் வேரோடு அகற்றுவாா்கள்.