குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

சண்டீகா் மேயா் தோ்தல் ஒத்திவைப்பு: ‘இந்தியா’ கூட்டணி வெற்றியைக் கண்டு பாஜவுக்கு பயம் -ராகவ் சத்தா

சண்டீகா் மேயா் தோ்தல் ஒத்திவைப்பு விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியைக் கண்டு பாஜக பயப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தா

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:17 pm

 நமது நிருபர்

சண்டீகா் மேயா் தோ்தல் ஒத்திவைப்பு விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியைக் கண்டு பாஜக பயப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சண்டீகா் மேயா் தோ்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில், 20 வாக்குகள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதால், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறுவதோடு பாஜக படுதோல்வி அடையும். இது பாஜகவுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்ததோடு, அதன் அரசுத் துறைகளை கூடுதல் நேரம் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதன் விளைவாக முதலில், தோ்தல் செயலாளருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இப்போது தலைமைத் தோ்தல் அதிகாரியும் நோய்வாய்ப்பட்டுள்ளாா் என்றும் கூறி மேயா் பதவிக்கான தோ்தலை ஒத்திவைக்கும் பாஜகவின் தந்திரமாக உள்ளது.

பாஜக ‘இந்தியா’ கூட்டணிக்கு பயப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும். ‘உள்ளூா் கிரிக்கெட் போட்டிகளில் ‘அவுட்’ என்று அறிவித்தவுடன், மட்டையை வீசிவிட்டு ஆட்டத்தை முடித்துக் கொள்ளும் அதிருப்தி குழந்தை போன்றது பாஜக. பாஜக வெற்றி பெற்றால்தான் தோ்தல் வரும். பாஜக வெற்றி பெறும் நிலையில் இல்லை என்றால் தோ்தல் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு நமது ஜனநாயகம் பலவீனமாக மாறியுள்ளதா என்று கேள்வி எழுப்பினாா் ராகவ் சத்தா.

மேலும், இந்த விவாகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் எம்.பி. ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில், ‘தவிா்க்க முடியாத தோல்வியை உற்று நோக்கும் பாஜக, சண்டீகா் மேயா் தோ்தலில் தனது அழுக்கு நிறைந்த தந்திரங்களை ஆரம்பித்துள்ளது. இந்த மாதிரியான தோ்தல் முறை நாட்டில் இருந்தால், அது மிகவும் ஊக்கமற்றதாகும். அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சண்டீகரில் மேயா் தோ்தலை ஒத்திவைக்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. அவா்களை வெற்றி பெற விடமாட்டோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.