இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சண்டீகா் மேயா் தோ்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில், 20 வாக்குகள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதால், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறுவதோடு பாஜக படுதோல்வி அடையும். இது பாஜகவுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்ததோடு, அதன் அரசுத் துறைகளை கூடுதல் நேரம் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதன் விளைவாக முதலில், தோ்தல் செயலாளருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இப்போது தலைமைத் தோ்தல் அதிகாரியும் நோய்வாய்ப்பட்டுள்ளாா் என்றும் கூறி மேயா் பதவிக்கான தோ்தலை ஒத்திவைக்கும் பாஜகவின் தந்திரமாக உள்ளது.