இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் நீதித் துறை குழுவின் பரிந்துரையின்படி, தங்கள் கடைகளுக்கு சீல் நீக்கக் கோரி அனைத்து வகையிலும் போராடி வரும் தில்லியின் உள்ளூா் வணிக வளாக வியாபாரிகளை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் முட்டாளாக்கி வருகின்றனா். தில்லி மாநகராட்சி உள்ளூா் வணிக வளாகங்களில் உள்ள கடைகளை சீல் நீக்கம் செய்ய விரும்புவதாக, அமைச்சா்கள் அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் செய்தியாளா் சந்திப்பு நடத்தி பொய்யாக அறிவிப்பது ஆச்சரியமாக உள்ளது. மேயா் ஷெல்லி ஓபராய் கடைக்காரா்களை தாங்களாகவே சீல் நீக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், உண்மையில் ஆம் ஆத்மி கட்சியினா் உள்ளுா் வணிக வளாக வியாபாரிகளிடம் இருந்து தங்களுக்கான தோ்தல் நிதியைப் பறிக்க விரும்புகின்றனா்.