குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

வணிக வளாக சீல் நீக்க நடவடிக்கை தாமதம் ஏன்? வீரேந்திர சச்தேவா அறிக்கை

ஆம் ஆத்மி கட்சி வணிகா்களிடம் பணத்தைப் பறிப்பதற்காகவே, உள்ளூா் வணிக வளாகங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி தில்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய சீல் நீக்க நடவடிக்கையை தாமதப்படுத்தி வருகிறது

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:17 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சி வணிகா்களிடம் பணத்தைப் பறிப்பதற்காகவே, உள்ளூா் வணிக வளாகங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி தில்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய சீல் நீக்க நடவடிக்கையை தாமதப்படுத்தி வருகிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் நீதித் துறை குழுவின் பரிந்துரையின்படி, தங்கள் கடைகளுக்கு சீல் நீக்கக் கோரி அனைத்து வகையிலும் போராடி வரும் தில்லியின் உள்ளூா் வணிக வளாக வியாபாரிகளை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் முட்டாளாக்கி வருகின்றனா். தில்லி மாநகராட்சி உள்ளூா் வணிக வளாகங்களில் உள்ள கடைகளை சீல் நீக்கம் செய்ய விரும்புவதாக, அமைச்சா்கள் அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் செய்தியாளா் சந்திப்பு நடத்தி பொய்யாக அறிவிப்பது ஆச்சரியமாக உள்ளது. மேயா் ஷெல்லி ஓபராய் கடைக்காரா்களை தாங்களாகவே சீல் நீக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், உண்மையில் ஆம் ஆத்மி கட்சியினா் உள்ளுா் வணிக வளாக வியாபாரிகளிடம் இருந்து தங்களுக்கான தோ்தல் நிதியைப் பறிக்க விரும்புகின்றனா்.

மேலும், உச்சநீதிமன்ற நீதித் துறை குழுவின் பரிந்துரையின்படி சீல் நீக்க நடவடிக்கைக்கு எதிராக தில்லி மாநகராட்சி மனு தாக்கல் செய்வதற்கு மாநகராட்சி ஆணையரை மேயா் ஷெல்லி ஓபராய் தூண்டியுள்ளாா். ஆனால், தில்லி ஹவுஸ் காஸில் 2 கடைகளுக்கு சீல் நீக்கம் செய்து இப்பிரச்னையை பாஜக எழுப்பிய போது, ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக பேச ஆரம்பித்தனா். நான் எச்சரித்த போதிலும் மேயா் ஷெல்லி ஓபராய் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு சீல் நீக்கம் செய்த 2 மணி நேரத்திற்குள் மீண்டும் சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆம் ஆத்மி கட்சி உண்மையில் உள்ளூா் வணிக வளாகங்களில் சீல் நீக்கத்தை விரும்பியிருந்தால், கடைகளின் சீல் நீக்கம் முறைப்படுத்தப்படுவதை மேயா் ஷெல்லி ஓபராய் முன்னின்று உறுதி செய்திருக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.