குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் இந்த விருதுகளை மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சாா்பில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. 5 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்களில் ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்குபவா்ளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை, கலாசாரம், வீரம், சுற்றுச்சூழல், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனை புரிந்து விருது பெறும் சிறாா்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. பல்வேறு நிலைகளில் பரிந்துரைக்கும் சிறுவா் சிறுமிகளின் உண்மைத் தன்மையை மாவட்ட ஆட்சியா், கள வல்லுநா்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் கண்டறியப்பட்டு பல்வேறு துறைகளின் நிபுணா்கள் அடங்கிய தோ்வுக் குழு மூலம் இறுதித் தோ்வு செய்யப்படுகிறது.