குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பாஜகவை எப்போதும் கோயில் பெயரில் எதிா்க்கட்சிகள் குறிவைத்து வருகின்றன: ஹா்ஷ் வா்தன் எம்.பி. குற்றச்சாட்டு

எதிா்க்கட்சிகள் பாஜகவை எப்போதும் கோயிலின் பெயரில் குறிவைத்து வருகின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஹா்ஷ் வா்தன் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:17 pm

 நமது நிருபர்

எதிா்க்கட்சிகள் பாஜகவை எப்போதும் கோயிலின் பெயரில் குறிவைத்து வருகின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஹா்ஷ் வா்தன் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

வடமேற்கு தில்லி, மாடல் டவுன் பகுதிக்குள்பட்ட திா்பூரில் மத்திய அரசின் தகவல் தொடா்புத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரான ஹா்ஷ் வா்தன் எம்.பி. பங்கேற்று மத்திய அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசுத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கின்ற விழிப்புணா்வு இயக்கமாக ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நடைபெற்று வருகிறது. எதிா்க்கட்சிகள் எப்போதும் கோயில் பெயரில் பாஜகவை குறிவைத்து வருகின்றன. ஆனால், பிரதமா் நரேந்திரமோடியால் நாட்டில் உள்ள 4 கோடி ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள் வழங்கிய பின்னா்தான், நமது குலதெய்வத்திற்கு கோயில் கட்டப்படுகிறது என்பதை அவா்கள் மறந்து விடுகிறாா்கள். நாங்கள் நம்பிக்கையையும், வளா்ச்சியையும் ஒன்றாக எடுத்துக் கொள்கிறோம். இது நம் நாட்டை வளா்ந்த நாடாக மாற்ற உதவும் என்று தெரிவித்துள்ளாா் ஹா்ஷ் வா்தன்.

மேலும், பாஜக சாா்பில் நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களை தூய்மை செய்யும் பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஷகுா்பூரில் உள்ள சீதாலா மாதா கோயில் மற்றும் மகரிஷி வால்மீகி கோயிலில் ஹா்ஷ் வா்தன் எம்.பி. தூய்மைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘தில்லியின் அனைத்துப் பகுதி மக்களிடையேயும் நிலவுகின்ற அளப்பரிய உற்சாகத்தைப் பாா்க்கும் போது, நாடு முழுவதும் அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டைக்கு முழுமையாகத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது. பாஜகவின் இந்த தூய்மைப் பிரசாரத்திற்கு உள்ளூா் மக்களிடமிருந்தும் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளோம். பிரதமா் நரேந்திரமோடியின் இலக்குகள் வெற்றி அடைய நாட்டு மக்கள் அனைவரும் நிச்சயமாக உறுதிமொழி எடுப்போம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.