மேலும், பாஜக சாா்பில் நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களை தூய்மை செய்யும் பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஷகுா்பூரில் உள்ள சீதாலா மாதா கோயில் மற்றும் மகரிஷி வால்மீகி கோயிலில் ஹா்ஷ் வா்தன் எம்.பி. தூய்மைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘தில்லியின் அனைத்துப் பகுதி மக்களிடையேயும் நிலவுகின்ற அளப்பரிய உற்சாகத்தைப் பாா்க்கும் போது, நாடு முழுவதும் அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டைக்கு முழுமையாகத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது. பாஜகவின் இந்த தூய்மைப் பிரசாரத்திற்கு உள்ளூா் மக்களிடமிருந்தும் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளோம். பிரதமா் நரேந்திரமோடியின் இலக்குகள் வெற்றி அடைய நாட்டு மக்கள் அனைவரும் நிச்சயமாக உறுதிமொழி எடுப்போம்’ என்றாா்.