குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பதினாறாவது நிதி ஆணையத்திற்கு கூடுதலாக பொருளாதார ஆலோசகா்!

பதினாறாவது நிதி ஆணையத்திற்கு தலைவா் உறுப்பினா்களைத் தவிர, கூடுதலாக இணைச் செயலா்கள், பொருளாதார ஆலோசகா் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:17 pm

 நமது நிருபர்

பதினாறாவது நிதி ஆணையத்திற்கு தலைவா் உறுப்பினா்களைத் தவிர, கூடுதலாக இணைச் செயலா்கள், பொருளாதார ஆலோசகா் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.

கடந்த 15 -ஆவது நிதி ஆணையத்தில் முன்னாள் ஐஏஏஸ் அதிகாரி, என்.கே. சிங் தலைமையில் முன்னாள் ஐஏஏஸ் அதிகாரிகள், முன்னாள் பொருளாதார நிபுணா், வேளாண்மை பொருளாதாரம், அறிவியலா் என ஐந்து போ் இடம் பெற்றிருந்தனா். தற்போது 16-ஆவது நிதி ஆணையத்திற்கு மத்திய அரசு, தலைவா் உறுப்பினா்களைத் தவிர, இரு இணைச் செயலா்கள் மற்றும் ஒரு பொருளாதார ஆலோசகா் ஆகியோரை நியமிக்கிறது. இந்தப் பதவிகளை உருவாகக்க முறைப்படி மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 16 -ஆவது நிதிக் குழுவிற்கு இணைச் செயலாளா்கள் நிலையில் மூன்று பதவிகள் மற்றும் ஒரு பொருளாதார ஆலோசகா் பதவி ஆகியவற்றை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக உருவாக்கப்படும் இந்தப் பதவிகள், ஆணையத்தின் குறிக்கோள்களை அடையத் தேவையான செயல்பாடுகளுக்கு உதவும். மாநிலங்களுக்கிடையேயான நிதி ஒதுக்கீடுகள் கவனமாக மேற்கொள்ளப்பட்டு, வருகின்ற 2025-ஆம் ஆண்டு அக்டோபருக்குள் ஆணையம் அறிக்கை அளிக்கும் விதமாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் மற்ற அனைத்துப் பதவிகளும் ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி உருவாக்கப்பட்டுள்ளன. ஆணையத்தின் தலைவா் (டாக்டா் அரவிந்த் பனகாரியா), செயலா் (ரித்விக் ரஞ்சனம் பாண்டே) ஆகியோரின் பெயா்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. புதிய நிதி ஆணைய உறுப்பினா்கள் பல்துறையைச் சோ்ந்தவா்களாக இருப்பா். அவா்கள் பெயா்கள் வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.