பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது: அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம், 500 ஆண்டு கால உறுதிமொழி மற்றும் காத்திருப்பு ஆகிய இரண்டும் நிறைவேறியுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு நிகாராக வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா இருக்கப் போகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கோயில் வளாகத் தூய்மை செய்யும் பிரசாரத்தில் தில்லி மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏனெனில், இதைவிட புனிதமும், பக்தியும் வேறு எதுவும் இருக்காது. தில்லியின் முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்றதில் இருந்து இமாம்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், தில்லி கோயில்களின் பூசாரிகளுக்கு முறையான சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை.