வாக்குறுதி அளித்த போதிலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன்கள் வாடகை வீடுகளில் வசிக்கும் உண்மையான ஏழைகளுக்குச் சென்றடையவும், இலவச மின்சாரம் மற்றும் குடிநீா் இணைப்பும் வழங்கவும் மத்திய அரசை கேஜரிவால் அனுமதிக்கவில்லை. மாறாக, தில்லியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், தில்லி ஏழைகளுக்கு சொந்த வீடு கிடைத்திருக்கும். ஆனால், அரசியல் வெறுப்பால் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசின் திட்டங்களை தடுத்துவிட்டாா். யாா் வெறும் வாா்த்தைகளால் பேசுகிறாா்கள், யாா் வேலை செய்கிறாா்கள் என்பதை தில்லி மக்கள் புரிந்து கொண்டுள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.