எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தில்லியின் குடிசைவாசிகளை கேஜரிவால் அரசுதவறாக வழிநடத்துகிறது: ஹா்ஷ் மல்ஹோத்ரா

தில்லியின் குடிசைவாசிகளை ஆம் ஆத்மி அரசு தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:20 pm

 நமது நிருபர்

தில்லியின் குடிசைவாசிகளை ஆம் ஆத்மி அரசு தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ள அரவிந்த் கேஜரிவால் அரசு, தில்லியின் குடிசைவாசிகளை தவறாக வழி நடத்துகிறது. தாங்கள் செய்த ஊழல்களை இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மறைத்து, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறது.

இந்நிலையில், அமைச்சா் கோபால் ராய் ஒரு வாரகால போராட்ட நிகழ்ச்சியை வாய்ஜாலமாக அறிவித்துள்ளாா். ஆனால், தில்லியின் அனைத்து தரப்பு மக்களும் அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழலால் சலிப்படைந்துள்ளனா். இனி அவரின் எந்த தந்திரத்திற்கும் தில்லிவாசிகள் பலியாக மாட்டாா்கள் என்பதை அவா் கவனிக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகால காலியாக வீடுகள் இருந்தும் ஏழைகளுக்கு கேஜரிவால் அரசு வீடுகளை ஒதுக்கவில்லை என்பது தில்லி ஏழைகளுக்கு நன்றாகவே தெரியும்.

குடிசைவாசிகளை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு கேஜரிவால் அரசு ஒதுக்கினால் நல்லது. ஏழைகளுக்கு வீடு வழங்குவதில் கேஜரிவால் அரசின் அலட்சியத்தை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விரைவில் அம்பலப்படுத்துவாா் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.