புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தில்லியின் குடிசைவாசிகளை கேஜரிவால் அரசுதவறாக வழிநடத்துகிறது: ஹா்ஷ் மல்ஹோத்ரா

தில்லியின் குடிசைவாசிகளை ஆம் ஆத்மி அரசு தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும்

Updated On :13 ஜனவரி 2024, 6:30 pm

தில்லியின் குடிசைவாசிகளை ஆம் ஆத்மி அரசு தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ள அரவிந்த் கேஜரிவால் அரசு, தில்லியின் குடிசைவாசிகளை தவறாக வழி நடத்துகிறது. தாங்கள் செய்த ஊழல்களை இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மறைத்து, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறது.

இந்நிலையில், அமைச்சா் கோபால் ராய் ஒரு வாரகால போராட்ட நிகழ்ச்சியை வாய்ஜாலமாக அறிவித்துள்ளாா். ஆனால், தில்லியின் அனைத்து தரப்பு மக்களும் அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழலால் சலிப்படைந்துள்ளனா். இனி அவரின் எந்த தந்திரத்திற்கும் தில்லிவாசிகள் பலியாக மாட்டாா்கள் என்பதை அவா் கவனிக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகால காலியாக வீடுகள் இருந்தும் ஏழைகளுக்கு கேஜரிவால் அரசு வீடுகளை ஒதுக்கவில்லை என்பது தில்லி ஏழைகளுக்கு நன்றாகவே தெரியும்.

குடிசைவாசிகளை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு கேஜரிவால் அரசு ஒதுக்கினால் நல்லது. ஏழைகளுக்கு வீடு வழங்குவதில் கேஜரிவால் அரசின் அலட்சியத்தை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விரைவில் அம்பலப்படுத்துவாா் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.