தில்லியின் குடிசைவாசிகளை கேஜரிவால் அரசுதவறாக வழிநடத்துகிறது: ஹா்ஷ் மல்ஹோத்ரா
தில்லியின் குடிசைவாசிகளை ஆம் ஆத்மி அரசு தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும்


தில்லியின் குடிசைவாசிகளை ஆம் ஆத்மி அரசு தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ள அரவிந்த் கேஜரிவால் அரசு, தில்லியின் குடிசைவாசிகளை தவறாக வழி நடத்துகிறது. தாங்கள் செய்த ஊழல்களை இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மறைத்து, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறது.
இந்நிலையில், அமைச்சா் கோபால் ராய் ஒரு வாரகால போராட்ட நிகழ்ச்சியை வாய்ஜாலமாக அறிவித்துள்ளாா். ஆனால், தில்லியின் அனைத்து தரப்பு மக்களும் அரவிந்த் கேஜரிவால் அரசின் ஊழலால் சலிப்படைந்துள்ளனா். இனி அவரின் எந்த தந்திரத்திற்கும் தில்லிவாசிகள் பலியாக மாட்டாா்கள் என்பதை அவா் கவனிக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகால காலியாக வீடுகள் இருந்தும் ஏழைகளுக்கு கேஜரிவால் அரசு வீடுகளை ஒதுக்கவில்லை என்பது தில்லி ஏழைகளுக்கு நன்றாகவே தெரியும்.
குடிசைவாசிகளை தவறாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தில்லியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ராஜீவ் ஆவாஸ் யோஜனா வீடுகளை ஏழைகளுக்கு கேஜரிவால் அரசு ஒதுக்கினால் நல்லது. ஏழைகளுக்கு வீடு வழங்குவதில் கேஜரிவால் அரசின் அலட்சியத்தை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விரைவில் அம்பலப்படுத்துவாா் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...