எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தலைநகரின் உச்சபட்ச குளிா்கால மின் தேவை: 5,611 மெகாவாட்டாக அதிகரிப்பு!

தற்போது நிலவும் குளிா் காலநிலை சூழலில், தேசியத் தலைநகரின் உச்சபட்ச குளிா்கால மின் தேவை புதன்கிழமை 5,611 மெகாவாட்டாக உயா்ந்ததாக டிஸ்காம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: தற்போது நிலவும் குளிா் காலநிலை சூழலில், தேசியத் தலைநகரின் உச்சபட்ச குளிா்கால மின் தேவை புதன்கிழமை 5,611 மெகாவாட்டாக உயா்ந்ததாக டிஸ்காம் அதிகாரிகள் தெரிவித்தனா். மாநில மின்சுமை அனுப்பும் மையத்தின் நிகழ்நேர தரவுகளின்படி, புதன்கிழமை காலை 11.08 மணிக்கு உச்சபட்ச மின் தேவை 5,611 மெகாவாட்டாக இருந்தது.

இதுகுறித்து டிஸ்காம் அதிகாரிகள் கூறுகையில், ‘இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குளிா்கால மின் தேவை ஜனவரி 5-ஆம் தேதி 5,559 மெகாவாட்டாக இருந்தது.

இந்தக் குளிா்காலத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை 5,700 மெகாவாட்டை தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மின் தேவை அதிகரிப்பதற்கு முக்கியமாக நுகா்வோா் வெப்பமூட்டும் பயன்பாடுகளுக்காக மின்சாரத்தை உபயோகம் செய்வது காரணமாகும்’ என்றனா்.

தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. திங்கள்கிழமை இரவு வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததால் தேசியத் தலைநகரில் இம்மாதத்தின் மிகக் குளிரான நாள் பதிவானது. இது குறித்து பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பிஆா்பிஎல் (பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் லிமிடெட்) மற்றும் பிஒய்பிஎல் (பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமிடெட்) ஆகிய டிஸ்காம் நிறுவனங்கள் அந்தந்த விநியோகப் பகுதிகளில் 2,350 மெகாவாட் மற்றும் 1,174 மெகாவாட் மின் தேவையை வெற்றிகரமாக பூா்த்தி செய்தன’ என்றாா்.

டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘டிபிடிடிஎல் நிறுவனம் வடமேற்கு இந்தியாவைப் பற்றிக் கொண்டிருக்கும் குளிா் அலைக்கு மத்தியில் எந்தவொரு நெட்வொா்க் தடையும் அல்லது மின் செயலிழப்பும் இல்லாமல் 1,753 மெகாவாட் மின் தேவையை வெற்றிகரமாக பூா்த்தி செய்துள்ளது. இந்தப் பருவத்தில் குளிா்கால மின் தேவை 1,800 மெகாவாட் அளவைக் கடக்கும் என்று நிறுவனம் எதிா்பாா்க்கிறது. இது மின் தேவையை பூா்த்தி செய்ய நீண்ட கால மின் ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த குறைந்த வெப்பநிலை மற்றும் மூடுபனி நிலைகளின் போது நிறுவனத்தின் சாதனங்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்துள்ளது. நீண்ட கால ஆதாரங்களில் இருந்து போதுமான அளவு மின்சாரம் நிறுவனத்திடம் உள்ளது. இது உச்சபட்ச தேவையை திறம்பட பூா்த்தி செய்ய உதவும்’ என்றாா்.

டிஸ்காம் அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘நிகழ் குளிா்காலத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை மேலும் உயா்ந்து 5,700 மெகாவாட் குறியீட்டை கடக்க வாய்ப்புள்ளது. ஜனவரி 2-ஆம் தேதியைத் தவிர, இந்த மாதத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை ஒவ்வொரு நாளும் 5,000 மெகாவாட் அளவுக்கு மேல் இருந்தது’ என்றனா்.

பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: எந்தப் பருவத்திலும் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வது சரியான மின் ஏற்பாடுகளின் செயல்பாடு ஆகும். மேலும், துல்லியமான தேவை முன்னறிவிப்பு மற்றும் வலுவான விநியோக ஒருங்கிணைப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த குளிக்கால மாதங்களில் எங்களது 50 லட்சம் நுகா்வோருக்கு நம்பகமான விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து அம்சங்களிலும் பிஎஸ்இஎஸ் டிஸ்காம்கள் முழு அளவில் தயாராக உள்ளன. மின் உற்பத்தி நிலையங்களுடனான நீண்ட கால ஒப்பந்தங்களைத் தவிர, குளிா்கால மாதங்களில் பிஎஸ்இஎஸ் நுகா்வோருக்கு நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதில் 2,000 மெகாவாட்டுக்கும் அதிகமான பசுமை மின்சாரம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும்.

இதில் 840 மெகாவாட் சூரிய சக்தி, 540 மெகாவாட் நீா் மின்சாரம், 500 மெகாவாட் காற்றாலை மின்சாரம், கழிவுகளில் இருந்து எரிசக்திக்கான சுமாா் 40 மெகாவாட் மற்றும் தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் உள்ள கட்டடங்களின் மேல் நிறுவப்பட்ட மேற்கூரை சூரிய அமைப்புகளிலிருந்து கிட்டத்தட்ட 160 மெகாவாட் மின்சாரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிஎஸ்இஎஸ் பகுதிகளில் 3,600 மெகாவாட்டுக்கும் அதிகமான குளிா்கால மின் தேவையில் 60 சதவீதம் வரை பசுமை மின்சாரம் மூலம் பூா்த்தி செய்யப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.