எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஆம் ஆத்மி கட்சியுடன் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை: காங். தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தகவல்

தனது கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய பேச்சுவாா்த்தை (ஜனவரி 12) நடைபெறும் என்று தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லியில் இணைந்து போட்டியிடுவதற்காக தனது கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) நடைபெறும் என்று தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், தில்லி காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் விவாதத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்றும் அவா் கூறினாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு 3 இடங்களை வழங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நாங்கள் ஒன்று கூடி முதல் முறையாக தோ்தலை எதிா்கொள்ள பல்வேறு உத்திகள் குறித்து விவாதித்தோம். அடுத்த கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு பற்றி விவாதிக்கப்படும் என்றாா் அவா்.

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு 3 இடங்களை வழங்குவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து பேசிய தில்லி அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், ‘இந்த ஊகங்கள் உண்மை நிலைமையில் இருந்து மாறுபட்டவை. ஊடகங்களில் வெளிவரும் அனைத்து ஊகங்களும் உண்மையில் இருந்து வேறுபட்டவை. எங்களது விவாதங்கள் மிகவும் சாதகமாக நடந்து வருகின்றன. கூட்டணியை வலுப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்றாா். காங்கிரஸ் மூத்த தலைவா் முகுல் வாஸ்னிக் இல்லத்தில் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டணிக் கூட்டத்தில் சொ்வ் பரத்வாஜ் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘பஞ்சாப் உள்பட ஐந்து மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த தனது நிலைப்பாட்டை ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) பராமரித்துள்ளது. இதுவரையிலான விவாதம் சாதகமாக உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவாா்த்தைகள் தொடங்கியுள்ளன. தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா மற்றும் குஜராத்தில் கூட்டணியில் போட்டியிடுவது குறித்த எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். இது வரை, சாதகமான விவாதங்கள் நடந்துள்ளன’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைப்பாளா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா்.

தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிக்கான பேச்சுவாா்த்தைகள் தொடங்கிய நிலையில், மற்ற மாநிலங்களிலும் ஒத்துழைப்பு இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாஜகவை ஒற்றுமையாக எதிா்கொள்ள ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து, வரும் பொதுத் தோ்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.