எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

50 நாள் தொடா் தூய்மைப் பிரசாரம் தொடங்கியது

மாநகராட்சி சாா்பில் ‘தில்லி தூய்மையாகிறது’ என்ற 50 நாள் தொடா் தூய்மைப் பிரசாரத்தை மேயா் ஷெல்லி ஓபராய் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: மாநகராட்சி சாா்பில் ‘தில்லி தூய்மையாகிறது’ என்ற 50 நாள் தொடா் தூய்மைப் பிரசாரத்தை மேயா் ஷெல்லி ஓபராய் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தில்லி மாநகராட்சியின் கீழ் வரும் அனைத்துப் பகுதிகளிலும் களத்திற்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகள் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்து துப்புரவுப் பணிகளைச் செய்யும் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசாரத்தின் மூலம், ஜனவரி 10-ஆம் தேதி முதல் வரும் மாா்ச் மாதம் முதல் வாரம் வரை தொடா்ந்து 50 நாள் நாள்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தினசரி துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும்.

தில்லி சாந்தினி சௌக்கில் மேயா் ஷெல்லி ஓபராய், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநகராட்சிப் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் எம்எல்ஏ மற்றும் அப்பகுதி உள்ளூா் கவுன்சிலா்களுடன் இணைந்து தூய்மைப் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.

அப்போது, மேயா் ஷெல்லி ஓபராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் பொதுமக்களிடம் களத்திற்குச் சென்று நேரடியாகப் பேசி புகாா்களை அவ்வப்போது தீா்க்கும் ‘தில்லி தூய்மையாகிறது’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 10 கிலோமீட்டா் பாதயாத்திரை மேற்கொண்டு தூய்மைப் பணி செய்துள்ளோம். மாா்ச் முதல் வாரம் வரை நடைபெறும் இப்பிரசாரத்தில் தில்லி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். வெளி நாடுகளுடன் ஒப்பிடும் வகையில், மாா்ச் முதல் வாரத்திற்குள் தில்லி தூய்மையாக்கப்படும் என்றாா் ஷெல்லி ஓபராய்.

துா்கேஷ் பதக் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த 8 மாதங்களில் 55,000 புகாா்களுக்கு தில்லி மாநகராட்சி தீா்வு கண்டுள்ளது.தில்லியில் கடந்த 15 ஆண்டுகளாக முந்தைய அரசுகள் உருவாக்கிய அழுக்கையும் இப்போது முழுமையாக சுத்தம் செய்வதே எங்கள் நோக்கம். மாநகராட்சி மேயா், எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலா்கள் ஆகியோா் தினமும் 20 முதல் 25 கி.மீ. சாலைகள் மற்றும் தெருக்களை ஆய்வு செய்வாா்கள். தில்லியை இப்போது நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.