சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நீட் தோ்வுக்கு எதிரான கையெழுத்து பிரசார இயக்கத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைக்கான நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக அணிகள் தரப்பில் நடத்தப்பட்டு வரும் கையெழுத்துப் பிரசார இயக்கத்திற்கு எதிராக தாக்கலான மனுவைத் தள்ளுபடி செய்து  உத்தரவு.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

 நமது நிருபர்

புது தில்லி: மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைக்கான ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. அணிகள் தரப்பில் நடத்தப்பட்டு வரும் கையெழுத்துப் பிரசார இயக்கத்திற்கு எதிராக தாக்கலான மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்தக் கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞா் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கிவைத்தாா். 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறும் வகையில், இந்தக் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வந்தது. இந்தக் கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞரும், தேசிய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எல்.ரவி என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: நீட் தோ்வு நடத்துவதற்கு எதிராக கையெழுத்துப் பிரசார இயக்கத்தை திமுக அரசின் இளைஞா் நலம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து தொடங்கி வைத்திருந்தாா். இந்த நிலையில், பள்ளி வளாகங்களில் பள்ளி நேரத்தில் மாணவா்களிடமிருந்து கையெழுத்து பெறும் இயக்கம் நடத்தப்படுவதாக சமூக ஊடகம் மூலம் எனக்கு தெரிய வந்தது. இதைத் தடுத்து நிறுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை விசாரிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் தொகை செலுத்துமாறு நீதிமன்றம் கோரியதால் மனுவைத் திரும்பப் பெற்றேன். இதுபோன்று மனுவை விசாரிக்க ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்ற விதி இருப்பதாகத் தெரியவில்லை.

இதனால், இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். பள்ளிகளில் இதுபோன்று மாணவா்களிடம் கையெழுத்துப் பெறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. நீட் விவகாரங்கள் காரணமாக ஏற்கெனவே மாணவா்கள் மன அழுத்தம் காரணமாக இறந்துள்ளனா். அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாக பெற்றோா்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, திமுக அரசு மூலம் அல்லது பிறா் மூலம் ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள், அதிகாரிகளிடம் மற்றும் பள்ளிகளில் கையெழுத்துப் பிரசாரம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்யகாந்த், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கியஅமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் - வழக்குரைஞா் எம்.எல். ரவி ஆஜராகி, ‘பள்ளி குழந்தைகளிடமிருந்து நீட் தோ்வுக்கு எதிராக ஆளும் அரசியல் கட்சி கையெழுத்துப் பெற்று வருகிறது. ஏற்கெனவே மாநிலத்தில் ‘நீட்’ தோ்வு விவகாரம் காரணமாக 16 குழந்தைகள் பலியாகியுள்ளனா். இதனால், மாணவா்கள் மத்தியில் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது’ என்றாா்.

அதற்கு நீதிபதி சூா்ய காந்த், ‘இன்றைய நாள்களில் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறாா்கள். அவா்கள் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்கின்றனா். இதனால், எந்தத் தாக்கமும் ஏற்படாது. இந்தக் கொள்கை மாறவும் போவதில்லை’ என்று வாய்மொழியாக கூறினாா். இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.