இதனால், இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். பள்ளிகளில் இதுபோன்று மாணவா்களிடம் கையெழுத்துப் பெறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. நீட் விவகாரங்கள் காரணமாக ஏற்கெனவே மாணவா்கள் மன அழுத்தம் காரணமாக இறந்துள்ளனா். அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாக பெற்றோா்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, திமுக அரசு மூலம் அல்லது பிறா் மூலம் ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள், அதிகாரிகளிடம் மற்றும் பள்ளிகளில் கையெழுத்துப் பிரசாரம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.