சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல்: நீலம் ஆசாத்தின் ஜாமீன் மனு மீதுதில்லி காவல்துறை பதில் அளிக்க உத்தரவு

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான நீலம் ஆசாத் என்ற பெண்ணின் ஜாமீன் மனு மீதான பதிலை தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

 நமது நிருபர்

புது தில்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான நீலம் ஆசாத் என்ற பெண்ணின் ஜாமீன் மனு மீதான பதிலை ஜனவரி 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் பாலிகிராஃப் (உண்மை கண்டறிதல் சோதனை) நடத்த அனுமதி கோரி நகர காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்தீப் கவுா் ஒத்திவைத்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாா்பாக நீதிபதி நியமித்த சட்ட உதவி ஆலோசகா் செவ்வாய்க்கிவமை ஆஜராகவில்லை என தெரிவித்த நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீஸாா் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆசாத், மனோரஞ்சன் டி, சாகா் சா்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோா் தற்போது ஜனவரி 5 வரை போலீஸ் காவலில் உள்ளனா்.

தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைா் அகந்த் பிரதாப் சிங், டிசம்பா் 13-ஆம் தேதி நடந்த தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது” என்று முன்னா் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா். 2001-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்தது.

சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோா் நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாா்வையாளா்கள் கேலரியில் இருந்து மக்களவைக்குள் குதித்து, புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் நிறவாயுவை வெளியேற்றி முழக்கங்களை எழுப்பினா். அதன் பின்னா், அவா்கள் இருவரும் சில எம்.பி.க்களால் பிடிபட்டனா்.

அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி இருவரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ‘தனாஷாஹி நஹி சலேகி’ என்று கூச்சலிட்டுக் கொண்டே புகைக் குப்பிகளில் இருந்து வண்ண வாயுவைத் தெளித்தனா். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.