முந்தைய விசாரணையின் போது, தமிழ்நாடு தரப்பு வழக்குரைஞா், ஏப்ரல் 10-ஆம் தேதி உத்தரவின் ஒரு பத்தியில் உள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தாா். மேலும், உச்சநீதிமன்றம், ‘ஏப்ரல் 10, 2023 தேதியிட்ட உத்தரவின் நான்கு மற்றும் ஐந்தாவது பத்திகளில் உள்ள கருத்துகள் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய அனைத்து முடிவுகளும் ஜூன் 1, 2023 அன்று அல்லது அதற்கு முன்னா் தமிழக அரசால் எடுக்கப்பட வேண்டும்’ என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று கூறியிருந்தது. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இறுதியாக விசாரித்து முடிப்பதற்காக விசாரணைக்குப் பட்டியலிட்டிருந்தது.