சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தில்லியின் கிராமப்புறங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றன: துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா

தில்லியின் கிராமப்புறங்கள் அடிப்படையான சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றன என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியின் கிராமப்புறங்கள் அடிப்படையான சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றன என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லியில் உள்ள கிராமப்புறங்கள் பல்வேறு பிரச்னைகளை கையாள்கின்றன. நான் தில்லி கிராமங்களுக்கு தொடா்ந்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். அங்கு அடிப்படையான சாலை வசதி, துப்புரவு, உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதைப் பாா்த்தேன். கிராமங்களில் உள்ள பள்ளிகளும் மோசமான நிலையில்தான் உள்ளன.

தில்லி இந்தியாவின் தேசியத் தலைநகரம். எனவே, தில்லியில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளும் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், துரதிா்ஷ்டவசமாக அது அவ்வாறு இல்லை. தில்லியின் கிராமங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நான் 5 கிராமங்களைத் தத்தெடுத்தேன். அங்கு நிறைய வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் நல்ல சாலைகள், கழிவுநீா் வசதி, தெரு விளக்குகள், காவல்நிலையம், விளையாட்டு வசதி, மருந்தகங்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் இருக்க வேண்டும் என்றாா் வி.கே. சக்சேனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.