தில்லி இந்தியாவின் தேசியத் தலைநகரம். எனவே, தில்லியில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளும் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், துரதிா்ஷ்டவசமாக அது அவ்வாறு இல்லை. தில்லியின் கிராமங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நான் 5 கிராமங்களைத் தத்தெடுத்தேன். அங்கு நிறைய வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் நல்ல சாலைகள், கழிவுநீா் வசதி, தெரு விளக்குகள், காவல்நிலையம், விளையாட்டு வசதி, மருந்தகங்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் இருக்க வேண்டும் என்றாா் வி.கே. சக்சேனா.