சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

கேஜரிவாலுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை இல்லை: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்க இயக்குநகரத்தின் விசாரணையைத் தவிா்க்கும் விதம், நீதித் துறையில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை தெளிவாகக்குகிறது

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

 நமது நிருபர்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்க இயக்குநகரத்தின் விசாரணையைத் தவிா்க்கும் விதம், நீதித் துறையில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை தெளிவாகக்குகிறது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநகரம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மூன்று முறை அழைப்பாணை அனுப்பியும் அவா் ஆஜராகவில்லை. முறையற்ற சாக்குப் போக்குகளை தெரிவித்து கேஜரிவால் அமலாக்க இயக்குநரகம் முன் ஆஜராகாத விதம், நாட்டின் நிா்வாகம் மற்றும் நீதித் துறையில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவாகக்குகிறது. இதன் பிறகும் தில்லி முதல்வராக நீடிக்கும் தாா்மிக உரிமை அவருக்கு இல்லை.

அமலாக்க இயக்குநரகத்துக்கு பதில் கடிதங்கள் அனுப்புவதைத் தவிா்த்து, அவா் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், அவா் அதைச் செய்ய மாட்டாா். ஏனெனில், கலால் கொள்கை வழக்கில் அவருக்குப் பெரும் பங்கு உள்ளதால் நீதிமன்றத்தில் நிவாரணம் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களான மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகளின் அடிப்படையில், அதே வழக்கில் ஆஜராகக் கோரி கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் மட்டும் எப்படி சட்டப்பூா்வமாக தவறாகும் என்பதை அவரே விளக்க வேண்டும். தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் எந்த நீதிமன்றத்திலும் ஜாமீன் பெற முடியாமல் இருப்பது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நீதிமன்றத்தாலும் அவா்கள் கண்டிக்கப்படுகிறாா்கள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.