டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தில்லியின் மோசமான நிலை குறித்து விவாதிக்கத் தயாரா? கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா அழைப்பு

சுகாதாரச் சேவைகள் போன்றவற்றைப் பற்றிய வெளிப்படையான பொது விவாதத்திற்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைக்கிறேன்

News image
Updated On :14 டிசம்பர் 2024, 6:32 pm

 நமது நிருபர்

தில்லியின் குடிமைச் சேவைகள், பரிதாபகரமான சாலைகள், பொதுப் போக்குவரத்து, சுகாதாரச் சேவைகள் போன்றவற்றைப் பற்றிய வெளிப்படையான பொது விவாதத்திற்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைக்கிறேன் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக அரவிந்த் கேஜரிவாலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியும் ஆம் ஆத்மி கட்சியால்

நிா்வகிக்கப்படுகிறது. ஆனால், தில்லி மோசமான மாசுபட்ட தேசியத் தலைநகரங்களில் ஒன்றாகவும், நாடு தழுவிய அளவில் துப்புரவுக் கணக்கெடுப்பில் 49ஆவது இடத்திலும் உள்ளது.

நிா்வாகத் திறமையற்ற வகையில், பொதுச் சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. குடிமைச் சேவை செயலிழப்பால் இந்த மழைக்காலத்தில் மின்சாரம் தாக்கி, 62 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த ஆண்டு முழுவதும் நகரில் நடந்த திட்டமிட்ட கொலைகளின் எண்ணிக்கையை மிக அதிகமாக உள்ளது. தில்லி அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டாக முதல்வரின் அதிகாரபூா்வ இல்லமான, ‘ஷீஷ் மஹால்’ உள்ளது.

அரவிந்த் கேஜரிவால் அரசும், தில்லி மாநகராட்சியும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன. குறிப்பாக, காற்று மாசுபாடு, யமுனை நதியை சுத்தம் செய்தல், பொது சுகாதாரம், பரிதாபகரமான சாலைகள், பரிதாபகரமான பொது மருத்துவமனைகள், நீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் போன்ற தில்லி ஜல் போா்டு சேவைகளின் தோல்வி, மின்விநியோக நிறுவனங்களின் கொள்ளை,

அரசு பள்ளிகளின் மோசமான வருகைப் பதிவு, ரேஷன் காா்டுகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குவதில் தோல்வி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது கட்சியின் அரசின் கீழ் பொது சேவைகள் மற்றும் ஊழல்கள் குறித்து என்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு நான் சவால் விடுகிறேன் என்றாா் வீரேந்திர சச்தேவா.